- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

2022-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு
2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
புதுடில்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய தி்டட்டத்திற் கான அடிக்கல் நாட்டு வுிழா இன்று துவங்கியது. அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்பட உள்ளது. 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறன்களை வளர்க்க இந்த மையம் அமையும். இது இந்தியாவின் சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும்.ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியகத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தற்போது இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக 2.6 டிரில்லியன் டாலர் அளவில் உள்ளது.
உற்பத்தி துறை மற்றும் வேளாண்துறையின் மூலம் 2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை 2 மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரயிலில் பயணித்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தார்.