- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு
தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசடி தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, ராஜா உட்பட பலர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் வீடு, கலைஞர், ‘டிவி’ வட்டாரங்களில் பீதி நிலவுகிறது.
ரூ.1.76 லட்சம் கோடி
இந்த ஊழல் காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ.,
இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்து உள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்கு, கைமாறாக, தி.மு.க.,வுக்கு சொந்தமான, கலைஞர், ‘டிவி’க்கு, டி.பி., குரூப் நிறுவனம், 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கும், இதில் அடக்கம்.
இந்த வழக்குகளை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார். சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், முதல் வழக்கில், ராஜா, கனிமொழி, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பெஹுரா, ராஜாவின் முன்னாள் தனிச் செயலர், ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட, 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.