- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்
வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களாக நடத்தி வரும் போராட்டம்,புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
தலைநகர் டாக்காவையொட்டி சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 10,000 பேர் போலீஸாரால் வீச்சானந தண்ணீரைப் பாய்ச்சி அப்புறப்படுத்தப்பட்டனர்.
டாக்காவின் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 5,000 பேரைக் கலைப்பதற்காக போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 4,500 ஆயத்த ஆடை ஆலைகளைக் கொண்டுள்ள வங்கதேசம், ஆண்டுக்கு3,000 கோடி டாலர் (சுமார் இலங்கை ரூபா ரூ.2.11 லட்சம் கோடி) மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் அந்தத் துறை வங்கதேசப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்தச் சூழலில், தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை வங்கதேச அரசு கடந்த டிசம்பர் மாதம் 8,000 டாக்காவாக (சுமார் ரூ. 6,700)-ஆக உயர்த்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
எனினும், விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் இந்த ஊதிய உயர்வு போதாமல் உள்ளது எனக் கூறி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.