- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
- மும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு
- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல் நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை அறிவிப்பதற்கு முன்பாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் மற்றும் செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேர்காணல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக ஜனவரியில் வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. பின்னர் 2-ம் கட்டமாக தேனி, நீலகிரி உள்ளிட்ட ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், 3-ம் கட்டமாக 6 மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற உள்ளது. அதன்படி, 6-ம் தேதி தஞ்சாவூரிலும், 7-ம் தேதி திருச்சியிலும், 8-ம் தேதி பெரம்பலூர், அரியலூரிலும், 9-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூரிலும் நேர்காணல் நடைபெற உள்ளது. அப்போது ரஜினி, காணொளி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.