- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது
டெல்லி விமான நிலையத்தில் மகளை பார்ப்பதற்காக போலியான டிக்கெட்டுகளுடன் வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி சையத் உமர் மற்றும் அவரது மனைவி என். சையேடி. இவர்கள் இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனைய கட்டிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளனர்.
அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை பிடித்து விசாரணை மேற்கொண்டது. அதில், காபூல் நகருக்கு சென்ற தங்களது மகளை பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலைய முனையத்திற்குள் அவர்கள் சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த தம்பதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய விமான போக்குவரத்து விதிகளின்கீழ் முறையான டிக்கெட் இன்றி விமான நிலைய முனையத்திற்குள் நுழைவது என்பது சட்ட விரோத செயல் ஆகும்.