- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!
உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் லண்டனில் அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதையடுத்து பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுகாதாரதுறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கும் ‘கொரோனா வைரசின் புதிய மாறுபாடு’ வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பிரிட்டனின் பல்வேறு இடங்களில் தற்போதைய நிலையை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
தெற்கு பிரிட்டனில் இந்த புதிய மாறுபாடுகளுடன் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை அடையாளம் காண முடிந்தது. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்ப ட்டுள்ளதுடன், பிரிட்டன் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
புதிய மாறுபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரியாது. ஆனால் அதன் காரணத்தை பொருட்படுத்தாமல் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.