- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு: உணவு விடுதியில் மக்கள் அதிர்ச்சி
பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் உணவுவிடுதியில் சாப்பிட்டு கொண்டிருதவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். மத்தியபிரதேச மாநிலம் மும்பையில் பாண்டுப் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு நபரின் செல்போன் பாக்கெட்டில் இருக்கும்போதே வெடித்து சிதறியது.
இந்தச் சம்பவம் ஜூன் 4 ம் தேதி நடந்தது. பின்னர் சி.சி.டிவி கேமரா மூலம் இந்த சம்பவம் கைப்பற்றப்பட்டது.
சி.சி.டிவி காட்சியில், ஒருவர் உணவகத்தில் தனது மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென்று அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறுகிறது. பின்னர் அவர் அவசரமாக தனது சட்டை பையில் இருந்த செல்போனை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். பின்னர் செல்போனை எடுத்து வெளியே வீசுகிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது.
செல்போன் வெடிப்பு காரணமாக அந்த மனிதர் சிறிய தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் உணவகத்தில் இருந்தவர்களிடையே பீதியை உருவாக்கியது.