- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது ஏற்புடையதல்ல என்கின்றார் மாவை சேனாதிராசா
நினைவேந்தல் நிகழ்வுகளை மாநகர சபை உட்பட உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொரத்தமானது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) கடந்த ஞாயிறு அன்று மாவை சேனாதிராஜா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை மையை சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார் என அறியவந்தது.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப் பதாகவும், அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் முன்வைத்த குற்றச்சாட்டை மாவை சேனா திராசா இதன்போது நிராகரித்திருந்தார். எப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் அன்றைய நினைவு நிக ழ்வின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் மாவை கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று முன்னாள் மூத்தபோராளி மு.மனோகர் பதிலளித்தார்.