- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்
புதுதில்லி: சீரான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக, தேர்தல் பிரசாரத்தின் போது தான் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான எச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகளில் சீர்திருத்தத்தை டிரம்ப் மேற்கொண்டார். அதன்படி, எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்காவில் பணிபுரிய வரும் பணியாளர்கள் எச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1,30,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000 அமெரிக்க டாலராக உள்ளது. இதனால், இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் செலவு அதிகரிக்கும் என்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்கர்களை அதிகமாக பணியமர்த்த வாய்ப்பு ஏற்படும்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி பணிக்காக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு எச்1பி விசா வழங்கி வருகிறது. இந்த விசாவிற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்புள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பின் உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், திறமையான தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கதாக இல்லை. சீரான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் அடங்கிய குழுவானது, அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளது. அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது அவர்களிடம் மேற்கண்ட கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது. ஒருங்கிணைந்து செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அமரிக்க அதிபருடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ள பிரதமர் மோடி, அர்பணிப்புடன் கூடிய பகிர்வு இரு தரப்பு உறவுகளை, தான் பதவியேற்றதில் இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும் அமெரிக்க எம்.பி.-க்கள் குழுவிடம் மோடி தெரிவித்துள்ளார்.
வருகிற 25-ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து, அரசு மூத்த அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
முன்னதாக, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரத்தில் பிரதமர் மோடியை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PM Narendra Modi conveys to US India’s unease over likely H-1B curbs