- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி
சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார்.
இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே.
மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.