- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

டில்லியில் கொரோனாவுக்கு 2,098 பேர் பலி !!
டில்லியில் மட்டும் கொரோனாவுக்கு 2,098 பேர் பலியாகி உள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
டில்லியில் இன்று(ஜூன் 11) புதிதாக 1,877 பேருக்கு கொரோனா உறுதியானது; 65 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 34,687 ஆக அதிகரித்தது. மொத்த பலியும் 1,085 ஆக உயர்ந்துள்ளது. டில்லி சுகாதாரத்துறை இவ்வாறு தெரிவித்திருக்கையில், டில்லி நகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய் பிரகாஷ், டில்லியில் 2,098 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், டில்லியில் 3 நகராட்சிகளிலும், ஜூன் 10ம் தேதி வரை கொரோனாவுக்கு பலியான 2,098 பேரின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன, அனைத்துமே கொரோனா உறுதி செய்யப்பட்ட சடலங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.