- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கிளிநொச்சியில் சுமார் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! இருவர் கைது
கிளிநொச்சியில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கு எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளதால் வட பகுதியில் போதைப்பொருள் பாவனையினை ஒழிக்கும் வகையில் மதுவரித்திணைக்களத்தின் விசேட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளரின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.