- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

காணாமல்போனோர் உறவினர்கள் – மைத்திரி இன்று சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு சட்டத்தரணிகள் மற்றும் இரு அருட்தந்தையர்களும் இணைந்தே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டி ருந்தபோதும், திடீரென அது மாலை 4 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு திடீர்ப் பயணமாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்புக்கு வடக்கு – கிழக்கின் 8 மாவட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் சார்பில் பாலேஸ்வரி, கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பில் கனகரஞ்சினி, லீலாதேவி, யசோதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பில் ஈஸ்வரி, யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சித்திராதேவி, மன்னார் மாவட்டத்தின் சார்பில் உதயசந்திரா, மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் அமலி, திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் ஜெயலக்சுமிபிள்ளை, அம்பாறை மாவட்டத்தின் சார்பில் செல்வராணி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களுடன் சட்டத்தரணியான இரத்தினவேல், அருட்தந்தை செபமாலை ஆகியோரும் மேலும் மூவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.