- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுசெயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர்சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள்வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட அவர்,
“கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், தேசியநலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை.
செயலணியின் பரிந்துரைகளின் மூலம், போர்க்குற்றங்களுக்காக எமது போர்வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளைஅனுப்ப ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முயற்சிக்கக் கூடும்.
மகிந்த ராஜபக்ச 12,600 விடுதலைப் புலிகளை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்காமல்விடுவித்தமை பாரிய தவறாகும்.
செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் அனுதாபிகளுக்குமே நன்மையளிப்பதாக இருக்கும்” என்றும்தெரிவித்தார்.