- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியமையானது, பாரிய தவறான விடயம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசியலமைப்பு தெளிவில்லாது காணப்படக்கூடாது எனவும், அதனால் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பயன்படுத்தும் போது அதில் பிரச்சினை எழுந்துள்ளதா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் வலுவான நபர் என்பதனால் தன்னால் பணியாற்ற முடியும் என கூறியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியாக வலுவற்ற ஒருவர் இருப்பாராயின், அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரே, 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட முறைப்பாடொன்றை அடிப்படையாக வைத்தே முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
தான் நீதித்துறைக்கோ அல்லது பொலிஸாருக்கோ அழுத்தங்களை விடுக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.