- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

உள்ளூராட்சி தேர்தல் ஆசனப் பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றச்சாட்டுகின்றார்
விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்ப ட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர். அன்றைய கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வருடங்கள் புளொட்டு க்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழர சுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வருடம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இணக்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்து ள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் தமிழரசுக்கட்சி வலி மேற்கு பிர தேச சபையை முழுமையாக தாம் எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாது எனவும், தமிழரசுக்கட்சியின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியறியுள்ளனர்.
இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கொழும்பில் உள்ள பத்திரிகையாளர்கள் கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்ட போது இணக்கம் தெரிவித்திருந்தனர். பின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்துக்கொண்டுள்ளனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை. உறுதி மொழி வழங்கி ஏமாற்றி விட்டனர் என மேலும் தெரிவித்தார்.