- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு
பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் பயணத்தை தவிர்ப்பதன் ஊடாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடனான உடன்படிக்கையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கலந்துரையாடல்
இந்த நிலையில், பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பிலான விசேஷ கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டிருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த கலந்துரையாடலின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் பயணத்தை தவிர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரோஷன் நிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்ஜய, லசித் மலிங்கா, எஞ்சலோ மெத்தீவ்ஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தங்கள் பயணத்தை தவிர்க்க திட்டமுட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
பாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திடீர் விலகல் – காரணம் என்ன?
விருப்பமும், எதிர்ப்பும்
பாகிஸ்தான் தொடரில் பங்குப்பெறுவதற்கு 70 சதவீத வீரர்கள் விருப்பத்தை தெரிவித்த போதிலும், 30 சதவீத வீரர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராயப்பட்டதாக தினேஷ் சந்திமால் குறிப்பிடுகின்றார்.