- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார்.
உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை மக்கள் மத்தியில் பாரிய குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.
கோவிட் – 19 வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் நேற்று முன்தினம் (மார்ச் 10) இலங்கையர் ஒருவர் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே இந்த குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்குள் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார்.
சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த பின்னணியில், நேற்று முன்தினம் நாட்டிற்குள் மற்றுமொரு நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

இலங்கைக்குள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்றாலும், இந்த தொற்று காரணமாக நாட்டிற்குள் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், குறித்த இலங்கையரின் குடும்பத்தினர் அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுகாதார பிரிவினர் சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உணவு வகைகளை வெளியிலிருந்து வழங்கி வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.