- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
தேர்தல் ஆணையரை சந்திக்க நாளை (புதன்கிழமை) டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை புதன்கிழமை பகல் 12 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணி மனு அளித்தது. இதையடுத்து, இம் மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் படி கடந்த 10-ம் தேதி, 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதில், அதிமுக சட்டவிதிகளின்படியே பொதுச் செயலாளர் நியமனம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இப்பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவின் பதிலுக்கான விளக்கத்தை தயார் செய்து, தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, தன் ஆதரவு எம்.பி.க்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் புதன்கிழமை பகல் 12 மணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசுகிறார்.