- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!
அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட, 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.
இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன. இந்நிறுவனங்களில், 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு, 23 சதவீத வருவாயை, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இது, அமெரிக்க பங்குச்சந்தையில், ‘எஸ் அண்டு பி’ குறியீட்டில் உள்ள, 500 நிறுவனங்கள் அளித்த, 10 சதவீத வருவாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில், ஐந்து பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது, ‘பார்ச்சூன்’ இதழின், ‘டாப் 1000’ நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள, 61 பெண் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஒப்பிடும்போது, விகிதாச்சார அடிப்படையில் அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின், அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா நிறுவனத்தின், ரேஷ்மா கேவல்ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
”தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, வங்கி, மின்னணு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில், 37 – 74 வயது வரையிலான, இந்திய வம்சாவளியினர், தலைமை செயல் அதிகாரி களாக பணியாற்றுவது பெருமைக் குரியது,”என, இந்தியஸ் போரா நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.