- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

1971ல் பாக்.,ஐ இதேநாளில் மண்டியிட வைத்த இந்தியா !!
1971ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில், இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதை டுவிட்டரில் பல்வேறு ஹேஷ்டாக்குகளில் இந்தியர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தான்(இப்போது வங்கதேசம்) இருந்தது. இதன் விடுதலைக்காக இந்தியா ராணுவம் அப்போது உதவியது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இந்தபோரில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சரணடைந்தனர். மேலும் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக இருந்ததும் இந்தப் போர்தான்.
இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் தினமாக இந்தியா அரசால் கொண்டாடப்படுகிறது. இந்த போரின் 50வது பொன்விழா வெற்றி ஆண்டு இன்று முதல் கொண்டாடப்படுகிறது. போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி, முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியில் இருந்து, பொன்விழா வெற்றி ஜோதியை பிரதமர் ஏற்றி வைத்தார்.
சமூகவலைதளமான டுவிட்டரிலும் இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் பலத்தையும், பாகிஸ்தான் 93 ஆயிரம் ராணுவ வீரர்களுடன் சரண் அடைந்த விஷயத்தையும், அப்போது இப்படி ஒரு போரை சவாலாக எடுத்து சென்ற அப்போதைய பிரதமர் இந்திராவையும் குறிப்பிட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
”1971 ஆம் ஆண்டு இந்தியா – பாக்., போரில் எங்கள் வீரர்களின் தைரியத்திற்கும், தியாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறோம். டிசம்பர் 16 என்பது நாம் அனைவரும் பெருமைமிக்க இதயங்களுடன் திரும்பிப் பார்க்கும் ஒரு நாள். எங்களுக்காக போராடி வென்ற அனைத்து தைரியமான ஆத்மாக்களுக்கும் வணக்கம் செலுத்துகிறோம்” என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.