- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா
காலை தொடங்கி மதியத்திற்கு சற்ற பின்னராக நிறைவுற்ற ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தனது பரிவாரங்களோடும் தொண்டர்கள் மற்றும் உபயகாரர்களின் உதவியோடும் செய்திருந்தார்.
ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்தார்.
இரதோற்சவத்தின் உபயகாரர் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
சுமார் 15000 பக்தர்கள் இன்றைய இரதோற்சவத்தைக் கண்டு களிக்கவும் உருகி வணங்கவும் வந்திருநதார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.