- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு
இந்திய உளவு அமைப்பான, ‘ரா’ என்னை கொல்ல சதி செய்கிறது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று, வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் சிறிசேனா, ‘ இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொல்ல சதி செய்கிறது. ஆனால், இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியாது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகள் அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு முழுமையாக தெரியாது. அது போல தான் இது’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சூழ்நிலையில் தான் அந்நாட்டு அதிபர் சிறிசேனா இது போல் பேசியது ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசுமறுத்துள்ளது. ‛‛அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன அப்படி பேசவில்லை” என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இலங்கை தலைவர்கள் இந்தியாவை குற்றம் சாட்டுவது இது முதல் முறை அல்ல. 2015ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்ஷே தோல்வியை சந்தித்த போது, ‘ரா’ அமைப்பு மீது குற்றம் சாட்டினார்.