- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
- தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார்.
லோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர்.
அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது லோக்சபாவில் இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார்.
அவரது மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக மாயாவதியுடன் கைகோர்த்து உள்ளார். லக்னோ விமான நிலையத்தில் தன்னை மாநிலத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியதாக புகார் கூறியுள்ள அவர், டில்லியில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.
முலாயம் பேச்சு குறித்து காங்., தலைவர் ராகுல் கூறுகையில், ‘எனது மதிப்பிற்குரிய தலைவர் முலாயம் சிங்கிற்கு, தேசிய அளவில் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்’ என்றார்.