- மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?
- இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்
- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு
- பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்
- கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

மகிந்த இணங்கினார் என்பதை நிரூபித்தால் பதவி விலகுவேன் – கெஹெலிய
முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் போர் குற்ற நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இணங்கியிருந்தார் என்பதை நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவரது விஜயத்தின் போது, வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், போர் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம், மனித உரிமை மீறல்களை விசாரிக்கவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியதாக தற்போதைய அரசாங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.