- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்
பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 107 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும்,வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதாவது:
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.