- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு
பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மந்திரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டு யோகா செய்தார்கள். மும்பை பாந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் பேசுகையில், நேர்மறையான எண்ணங்களுக்கு யோகா பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட யோகா உதவிகரமாக இருக்கும். பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மட்டும் யோகாவை சேர்ப்போமானால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவது சாத்தியமாகும், என்று குறிப்பிட்டார்.