- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

நவ. 5-ல் இந்திய – இலங்கை மீனவர் பேச்சு
இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த இதுவரை மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி,ரோலர் மடி,சுருக்கு மடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால்,இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில்,4-ம்கட்ட பேச்சுவார்த்தை நவ. 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளதாக இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் தெரிவித்தார்.