- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்
யாழ்ப்பாணம்-வரணி ஆகிய இடங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் தற்போது கனடாவில் பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுமான திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் கொண்டாட்டம் இன்று ஸ்காபுறோ நகரில கென்னடி வீதியில் உள்ள “கென்னடி கொன்வென்சன் சென்றர்” மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அழைக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள என பலர் குடும்பம் சார்ந்தவர்களோடு வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டமாக திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் விழா நடைபெற்றது என்றால் மிகையாகாது.
தம்பதிகள் இருவருமே ஒத்து குணாம்சங்கள் நிறையவே கொண்டவர்கள். அவர்களது பிள்ளைகள் இருவரும் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் தங்கள் பெற்றோருடன் பழகி வருகின்றனர்.
அதற்கு மேலாக திருமதி ராஜேஸ் அக்காவின் சகோதர சகோதரிகளின் நெருக்கமும் அவர்களது ஒத்துழைக்கும் மற்றும் அன்பு காட்டும் தன்மை தன்னைக கவர்ந்ததாக அங்கு உரையாற்றிய திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் மற்றும் அவர்களது குடும்பத்தின் நண்பரும் உறவினருமாகிய திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்தார்.