- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி
சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார்.
இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே.
மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.