- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு
நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பேசியபோது ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இந்திய-சீன பிரச்னை, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.