- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியில் கொரோனா தொற்று உறுதி
சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜிலின் நகரின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் பலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், இண்டர்நெட் மையங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ஜிலினில் மட்டும் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா இரண்டாம் அலை வீசும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர்.