- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு
படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.
முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றார். அங்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் டி.கபிலன், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் சந்தித்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர், மாதா நகர் 10வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் சிறுமி ஹாசினி என்பவரின் சடலம் 8.2.2017 அன்று அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தவுடன் குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.