- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சிரியாவில் தாக்குதல்: 98 பேர் பலி
மேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், 20 குழந்தைகள் உட்பட, 98 பேர் உயிரிழந்தனர். கடந்த, 2011 முதல், அதிபர், பஷர் – அல் – ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சிரியாவின் பல பகுதிகளை, புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களுடைய பிடியில் உள்ள பகுதிகளை, ராணுவ உதவியுடன் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது.
சமீபத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவத்தினரின் விமான தாக்குதலில், 20 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட, 98 பேர் பலியானதாக, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.