- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

சட்டமும் ஊரண்டங்கும் பொதுமக்களுக்கே… எங்களுக்கு கிடையாது – அமெரிக்க லிபெரல் காங்கிரஸ் தலைவி
அமெரிக்காவில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, ‘சலுான்’ கடைக்கு தனக்கவே திறக்கவைத்து முக கவசம் அணியாமல் சென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், ஒவ்வொரு மாகாணங்களிலும், வைரஸ் பாதிப்புகளுக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவில், சலுான் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சி உறுப்பினருமான நான்சி பெலோசி, ஆகஸ்ட் மாதம், 31ம் தேதி, கட்டுப்பாடுகளை மீறி, இங்குள்ள ஒரு சலுானுக்கு சென்றுள்ளார். அனுமதிஈரமான தலையுடன், முக கவசத்தை முகத்தில் அணியாமல், கழுத்தில் அணிந்தவாறு, சலுானில், பெலோசி நடந்து செல்லும், சி.சி.டி.வி., காட்சிகளை கடையின் உரிமையாளர் வெளியிட்டு உள்ளார்.
இது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, நேற்று முன்தினம், நான்சி பெலோசி கூறியதாவது:நான் அந்த சலுானுக்கு பல ஆண்டுகளாக சென்று வருகிறேன். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, சலுானில், ஒரு சமயத்தில், ஒரு நபருக்கு முடி திருத்தம் செய்ய அனுமதி உள்ளது என்றனர். அதை நம்பிதான், நான் சலுானுக்கு சென்றேன். மன்னிப்புஅது பொய் என்பதை பின்பு தான் உணர்ந்தேன். என்னை இழிவுபடுத்தவே, அவர்கள் என்னை ஏமாற்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
நான் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி, முக கவசம் அணியாமல் இருந்ததாக கூறுவது தவறு. தலை முடியை, நீரில் கழுவும்போது முக கவசம் அணிய இயலாது என்பதால், அதை நான் அப்போது அணியவில்லை. எனினும், முக கவசத்தை நான் எப்போதும் அணிந்திருப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.எனினும், நான்சி பெலோசியின் குற்றச்சாட்டை, சலுான் உரிமையாளர் கியஸ் மறுத்துள்ளார்.