- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

‘குல்பி ஐஸ்’ விற்கும் அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்
இந்திய குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார், 30. தேசிய சாம்பியன் ஆன இவர் 2008 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 2010 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார். சிறந்த வீரருக்கான அர்ஜுனா விருது வென்றவர்.
ஹரியானாவை சேர்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் 17 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்றார். 2014ல் இவர் சென்ற கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதன் பின் வாழ்க்கை திசை மாறியது. சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் தந்தை கடன் வாங்கினார். ஏற்கனவே பயிற்சிக்காகவும் கடன் வாங்கி இருந்தார். அரசும் கைவிட்டதால் வேறு வழியில்லாத நிலையில், கடனை அடைக்க தந்தையுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ‘குல்பி ஐஸ்’ விற்கிறார்.
இதுகுறித்து தினேஷ் குமார் கூறுகையில்,” காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியில் உள்ளேன். இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து சர்வதேச அளவில் சிறப்பானவர்களை உருவாக்க முடியும். எனது கடனை அடைக்க உதவி செய்து, நிலையான அரசு வேலை தர வேண்டும்,” என்றார்.