- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!
கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவிலுள்ள கோட்டயத்தில், ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, 21, கடந்த, 1992ல், பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை என, முடிவுக்கு வந்தனர். பின், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி, வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர், ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார். இதனால், அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து, தாமசும், செபியும், உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.