- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை, தமிழர்களுக்கு பாதிப்பையே தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரு சுமந்திரன் தொடந்து கருத்துக் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம். வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம். அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவுடன் இணைந்து, தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள், தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடனும் பேச்சு நடத்துவோம்.
இலங்கை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டியது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தான். அழுத்தம் கொடுப்பது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது. அமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவுள்ளோம்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். மாற்று வழிகளாக இதனை ஆராய்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.