- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பெரு அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இதில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பாவ்லோ குயரேரோ உதவியுடன் பந்தை பெற்ற ஆன்ட்ரே காரில்லோ, பாக்ஸின் வலது புறத்தில் இருந்து கோல்கம்பத்தின் இடது புறத்தில் பந்தை திணிக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது.
25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில் கோல்கீப்பர் பெட்ரோ காலஸ் தடுத்தார். 40-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிரென்ட் சைன்ஸ்பரி, இலக்குக்கு மிக அருகில் நின்று தலையால் முட்டிய பந்து இடதுபுறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் பெரு அணி 1-0 என முன்னிலை வகித்தது.
முடிவில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெறலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறியது.