- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

உடற்பயிற்சி, உணவு, சினிமா – ரகுல்பிரீத் சிங்
“எனக்கு ‘ஜிம்’மில் இருப்பது பிடிக்கும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இந்தி படத்துக்காக 45 நாட்களில் 8 கிலோ எடையை குறைத்தேன். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் ஒரு கப் காபியில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து புல்லட் காபி குடிப்பேன்.
இளம் தலைமுறையினர் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் இந்த தடவை தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகமானது. அரசியல் மீது நல்ல புரிதலும், சமூக அக்கறையும் இருந்து அரசியலுக்கு வந்தால் நிறைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.
6 ஆண்டுகளாக நான் சினிமாவில் நீடிக்கும் ரகசியம், சினிமா முழுக்க நானே இருக்க வேண்டும், நானே பேசவேண்டும், நானே நடனம் ஆடவேண்டும் என்றும், திரையை ஒட்டுமொத்தமாக நானே ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் எப்போதும் நினைக்க மாட்டேன். நான் நடித்த எல்லா படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள்.
ஒரு சினிமாவுக்கு பின்னால் நாங்கள் படும் கஷ்டங்களை யாரும் பார்ப்பது இல்லை. வெற்றி தோல்வியைத்தான் பார்க்கிறார்கள். ரசிகர்களுக்கு பிடிக்கும் படங்கள் எடுக்க எல்லா முயற்சியும் செய்கிறோம். சில நேரம் பலன் கிடைக்கும். சில நேரம் கிடைக்காது.”
இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.