- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்… : கமலுக்கு எச்.ராஜா பதிலடி
கொல்கத்தா காவல்துறை ஆணையரைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியது பற்றி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் கருத்தைத் தெரிவித்ததற்கு தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் கூறும்போது, “மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சுயமரியாதை உள்ள எந்த அரசும் இது போன்ற அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளாது” என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம். நம்புவோம். சுயமரியாதைக்கும் தேசவிரோதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்” என்று சாடியுள்ளார்.