- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி
ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று கிறிஸ்தவ தேவாலங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் கொழும்பிலுள்ள ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.
அவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.
எனினும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளில் தெரியவந்ததாக பல தடவைகள் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண்ணும் சிறுமியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.