- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்
இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன், கால்நடை விலங்களுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாலித்தீவில் எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாலிதீவுத்தில் விமானசேவைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1963-ம் ஆண்டு 50 ஆண்டுகளுக்கு முன் இந்த எரிமலை வெடித்தது. அப்போது 1600 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் சுமார் 160 எரிமலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.