- கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து - 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் உரையாற்ற பிரணாப் திட்டம்
மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, 82, உரையாற்ற உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் உரையாற்ற பிரணாப் திட்டம்
இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., மூத்த அதிகாரி ஒருவர், நேற்று கூறியதாவது: நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில்
உரையாற்ற வரும்படி, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு அழைப்புவிடுத்துள்ளோம். அந்த அழைப்பை, பிரணாப் ஏற்றுள்ளார். ஜூன், 7ல், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன், அவர் உரையாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
இத்தகவலை, பிரணாப் முகர்ஜி அலுவலகம், இதுவரை உறுதி செய்யவில்லை.
மூத்த, காங்., தலைவரானபிரணாப் முகர்ஜி, கடந்தாண்டு ஜூலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து, ஓய்வு பெற்றார்.அவர், முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் உடன்பணியாற்றியவர்.
ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.