- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்
ஒடிசாவில் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட அபராதங்கள், நாடு முழுவதும், 1ம் தேதி(செப்.,1) அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியது, ஆட்டோவில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லாததற்காக, ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காற்று மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வண்டிக்கு பர்மிட் இல்லாததற்காக ரூ.10 ஆயிரம், பதிவெண் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், இன்சுரன்ஸ் புதுப்பிக்காததற்காக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து புவனேஸ்வர் நகரின் ஆர்.டி.ஓ., தெரிவிக்கையில், ஆட்டோவின் மதிப்பு ரூ.2 ஆயிரமோ அல்லது ரூ.62 ஆயிரமோ என்பது முக்கியமல்ல. விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.