- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

அ.தி.மு.க சிங்கம்; டிடிவி தினகரன் கொசு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது தவறு. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் பட்ஜெட் இருக்கும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம், அதன் பிரதிபலிப்பாகவே பட்ஜெட் இருக்கும் . துயரத்தின் வெளிபாடாகவே திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வருகை.
சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்து சட்டப்பேரவை தான் முடிவு செய்யும். அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.