Posted on by netultim2

அமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி (A.C.K)
31ம் நாள் நினைவஞ்சலி
கண்களைக் கண்ணீர் மறைக்க
கூப்பிட்டகுரல்களும் ஓய்ந்து போக
விடைகொடுத்து இன்றுடன் மாதமொன்று...
உண்மைதான் - ஆனாலும்
ஏற்கவோ கனக்கிறது உள்ளம்
நேற்றும் பார்த்தோம்
அறையினுள் நீங்கள் கட்டிலில் கால் மடித்து
அதற்கு முன்தினமும் எட்டிப்பார்த்தோம்
நடைவண்டியுடன் தளர்வான நடையுடன்
இன்றும் பார்த்தோம்
கதிரையில் அமைதியாக – அதே குழந்தைச் சிரிப்பு
நாளையும் பார்ப்போம்
எங்கள் முன் வழிகாட்டியாக
தொடர்வோம் உங்களை – நீங்கள் தந்த
ஆசியும், ஊக்கமும், பரிவும், பாசமும் இப்படி எத்தனையோ
எம் உள்ளத்தில் கொண்டு!